सः गजास्यः – ஸ: க³ஜாஸ்ய: – அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ),
सदा पातु – ஸதா³ பாது – எப்பொழுதும் காக்கட்டும்.
பொருள் :
அழகிய பிளிறல் உள்ளவர், உதிக்கின்ற கோடி சூர்ய ஒளியுள்ளவர், ( ஐந்து முகங்களைக் கொண்டவரால் ) பரமசிவனாரால் தோளில் தாங்கப்பட்டவர், முனிவர்கள், தேவர்கள் மற்றும் அடியார்கள் அனைவரையும், பெருவழிகளில் செல்கையில் ( பயணத்தில் ) அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ) எப்பொழுதும் காக்கட்டும். 16
# ஹேரம்ப³: – உரக்கப் பிளிறுபவர் என்றும் கொள்ளலாம்.
# ரத்²யாஸு – பயணத்தில் என்பது வாழ்க்கைப் பயணத்தில் என்றும் கொள்ளலாம்.
तं सोमसुन्दरं – தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ – அந்த ஸோமஸுந்தரரை
वन्दे – வந்தே³ – வணங்குகிறேன்.
பொருள் :
தன்னுடையதான தாமரைக் கண்ணைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால், யாரை மகிழ்வித்து, ஶ்ரீபதியாகிய பெருமாள் சக்கரத்தைப் பெற்றாரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 6
Meaning:
I adore that Somasundarar, after whom delighting with a Pooja with his eye (as a flower), Perumal gets chakram. 6
# பெருமாளுக்கு புண்டரீகாக்ஷன், பத்மாக்ஷன் என்றெல்லாம் பெயருண்டு. தாமரையிதழைப் போன்ற கண்களையுடையவர் என்று பொருள். இயல்பாகவே அப்படிப்பட்ட கண்களை உடையவர் என்றும் கொள்ளலாம்.
* நிஜ நேத்ர அம்புஜ க்ருத பூஜயா – தன்னுடைய/ விசேஷமான கண்ணாகிய தாமரையைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால்.
* நிஜ நேத்ராம்பு-ஜ க்ருத பூஜயா – தன்னுடைய ஆனந்தக் கண்ணீரைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால்.
பெருமாள் சக்கரம் பெற்ற சரித்திரம் :
திருமால் ஈசனிடம் சுதர்ஸன சக்கரம் பெற்ற வரலாறு சிவமஹாபுராணத்திலும் காணக்கிடைக்கிறது.
காஞ்சி புராணம் – திருமாற்பேற்றுப் படலம் (ஶ்ரீ சிவஞான சுவாமிகள் அருளியது) கூற்றுப்படி,
குபன் என்ற அரசன் ஒரு திருமால் பக்தன். அவனுக்கும் ததீசி முனிவருக்குமிடையே ஒரு முறை பகை ஏற்பட்டது. குபன், திருமாலிடம் முறையிட்டான். திருமால் ததீசி முனிவர் மீது தன் சக்கராயுதத்தை ஏவினார். முனிவரது வஜ்ர உடலை தாக்க முடியாமல் சக்கராயுதம் கூர் மழுங்கியது. அதனால் இத்தலத்தை அடைந்த திருமால், சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி, ருத்ராட்சம் அணிந்து சக்கரம் பெற வேண்டி, முறைப்படி ஈசனை பூஜை செய்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு ஆயிரம் நாமங்கள் சொல்லி அர்ச்சித்து வந்தார். ஒரு நாள், பூஜையின்போது ஈசனின் திருவிளையாடலால், ஒரு மலர் குறைந்தது. வழிபாட்டில் குறையேற்படலாகாது என்று எண்ணி, தன் கண்ணை பறித்து கண்மலரால் ஈசனை வழிபாடு செய்தார், திருமால். இறைவன் உளம் மகிழ்ந்து பெருவடிவு தாங்கி, திருமாலுக்கு காட்சி கொடுத்தார்.
பெருமான் திருமாலை பார்த்து பார்த்து, ‘‘நாராயணரே! தாமரை மலருக்காக உன் கண்ணை எடுத்து, அர்ச்சித்தமையால், உனக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். இனி, நீ தாமரைக் கண்ணன். ‘பதுமாக்கன்’ என்று நீ பேறு பெற்றதால், இத்தலம் ‘திருமாற்பேறு’ என்று உன் திருப்பெயரால் விளங்கப்பெறும்’’ என்று அருள் செய்து ‘‘சுதர்ஸனம்’’ என்னும் பெயர் கொண்ட சக்கரப்படையை வழங்கினார். நெடுமால் மிக்க மகிழ்ந்து சிவனாரை மும்முறை வலம் வந்து வணங்கினார். ‘‘என் போன்று ஆயிரம் திருநாமங்கள் கூறி மலர்களால் வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரம் அருள வேண்டும்’’ என ஈசனை வேண்ட, அவ்வாறே வரம் அளித்தார்.
திருமால்பூர் அருள்மிகு மணிகண்டீச்வரர் கோயில் வேலூரில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் பக்தர்களுக்கு சடாரி சார்த்தி, தீர்த்தம் தருவது தனி சிறப்பு.
இத்தலத்தை வழிபடுவோருக்கு உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு.
அன்று வரமளித்த பரமேச்வரரே இங்கு சோமசுந்தரராக வீற்றிருக்கிறார்.
பீஷ்மரது அன்னையினுடைய ( கங்கையினுடைய நீர் தேங்கியுள்ள ) குளத்திலிருந்து நீரை எடுத்து வந்து ஆறுமுகனால் ( முருகனால் ) அருந்தப்பட்ட, தன் தாயின் ஸ்தனங்களைத் தான் குடிப்பதற்கென கழுவியவரான அந்த ( யானை முகத்தவர் ) குழந்தை கணேசர் நம்மீது மகிழ்ச்சியாய் இருக்கட்டும். 13
तं सोमसुन्दरं – தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ – அந்த ஸோமஸுந்தரரை
वन्दे – வந்தே³ – வணங்குகிறேன்.
பொருள் :
எந்த தேவதேவரை ஆராதித்து, மிருகண்டுவினுடைய புதல்வரான மார்க்கண்டேய முனிவர், ஆங்கு அப்பொழுதே நிலைப்புத்தன்மையை அடைந்தாரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 5
Meaning :
I adore that Somasundarar, after worshiping Whom, Rishi Markandeya, son of Rishi Mrkandu on the spot attained eternity. 5
நிலைப்புத்தன்மை – மூப்படையாமலும், மரணம் ஏற்படாமலும் ஆரோக்கியமாக இருக்கும் தன்மை.
ரிஷி மார்க்கண்டேயர் :
தவத்தின் மேன்மையை விளங்கச் செய்யும் அநேக தவசீலர்கள் நம் பாரத மண்ணில் தோன்றியுள்ளனர். அவர்களுள் ஒருவர் மிருகண்டு முனிவர். இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் மிருகங்கள் இவரது உடலில் அரிப்பு தீர உரசிக்கொள்ளுமாம். இதனால் மிருகண்டு என்ற பெயர் ஏற்பட்டது. மிருகசிருங்கர் – சுவிருத்தா முனி தம்பதிக்கு பிறந்தவர். மிருகண்டு முனிவர் சிறந்த சிவபக்தர், வேதவிற்பன்னர், தேஜஸ்வி. தக்க காலத்தில் அவருக்கு முத்கல முனிவரின் கன்னிகையான மருத்வதியுடன் விவாஹம் ஏற்பட்டது. இருவரும் ஆசார அனுஷ்டானங்கள் தவறாமல் வாழ்ந்து வந்தனர். புத்திரப்பேறு மட்டும் வாய்க்கவில்லை. புத்திரப்பேறு வேண்டி காசிக்குச் சென்று பரமேச்வரரைக் குறித்து தவம் செய்தனர். தவத்திற்கு மெச்சி சிவபெருமான் தோன்றினார். முனி தம்பதியர் சங்கரனாரிடம் புத்திர வரம் வேண்ட, சங்கரனார் குணவானாக அல்லாத நீண்ட ஆயுளுடைய பிள்ளை வேண்டுமா அல்லது ஸகலகுணங்களுடன் கூடிய, ஸர்வஞனான பதினாறே ஆண்டுகள் ஆயுளுடைய பிள்ளை வேண்டுமா என்று கேட்டார். குறைந்த ஆயுளானாலும் நிறைந்த ஞானமுடைய பிள்ளையே வேண்டுமெனக் கேட்டார் முனிவர். இறைவனும் வரமளித்து மறைந்தார்.
பின் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மிருகண்டுவினுடைய புத்திரனானதால் மார்க்கண்டேயர் எனப் பெயர் பெற்றது. பதினாறு ஆண்டுகள் நன்றாகக் கழிந்தன. பதினாறாவது ஆண்டு முடியும் தருவாயில், மார்க்கண்டேயரை எண்ணி முனி தம்பதியர் கலக்கமுற்றனர். இதனை கவனித்த மார்க்கண்டேயர் விவரம் கேட்டறிந்தார். பின் தான் சிவக்ஷேத்ரங்களுக்கு யாத்திரை செல்வதாகவும், விரதங்களையும். ஸ்தோத்திரங்களையும் அனுஷ்டித்து சிவபெருமான் பிரீதியடையும்படி செய்து வருவதாகவும் கூறிச் சென்றார்.
தன் ஆயுள் முடியும் தருவாயில், புராணங்களின் படி காசி க்ஷேத்திரம் என்றும், தலபுராணத்தின்படி திருக்கடவூர் வந்து சேர்ந்ததாகவும் சொல்வர்.
உயிரை எடுத்துச் செல்ல யம கிங்கரர்கள் வந்த போது மார்க்கண்டேயர் வர மறுத்துவிட்டார். அவரது தேஜஸின் முன் அவர்களால் ஏதும் செய்ய முடியாமல் போகவே திரும்பி யமனிடம் சென்று கூறினர்.
யமனும் மார்க்கண்டேயரிடம் வந்தார். அப்போதும் மார்க்கண்டேயர் வர மறுத்து தான் செய்யும் ஸ்தோத்திர படனத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று வேண்டினார்.
இதைக் கேட்ட யமன் சரீரத்தின் நிலையற்ற தன்மையையும் , ஒவ்வொரு ஜீவனும் தன் கர்மத்திற்கு அனுசரித்து மரணம் எய்தும் என்பதையும், உரிய காலத்திற்கு முன் ஜீவன் போகாது, காலம் வந்தபோது ஜீவன் நில்லாது என்றும், தானும் ஈச்வர ஆஞ்ஞைப்படியே தன் கடமையை செய்வதாகவும், இவையெல்லாம் நீ அறியாயோ என்று கூறினார்.
மார்க்கண்டேயர் கூறினார், எவ்வாறு குடிமக்களை ஆளுவது அரசனோ, அவ்வாறு சிவபக்தாளை ஆளுவது அந்த பரமேச்வரரே. பக்தர்களிடம் உனது ஆணை செல்லுபடியாகாது. சிவாயநம என்றிருக்கும் பக்தர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பதையெல்லாம் தாங்கள் அறியமாட்டீர்களோ.
இதனால் கோபமுற்ற யமன் தன் பாசக்கயிற்றை வீசினார். மார்க்கண்டேயரும் சிவலிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார்.
பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் படர, அதை யமன் இழுத்தபோது, பரமேச்வரர் தோன்றி, தன் இடது திருவடியால் யமனை உதைக்க, அவன் தூதரே சென்று விழுந்து மாண்டான். மார்க்கண்டேயருக்கு ‘என்றும் பதினாறு’ எனும்படி அனுக்கிரகம் செய்தார், பரமேச்வரர்.
அந்த பரமேச்வரரே மதுரையில் சோமசுந்தரராக வீற்றிருக்கிறார்.
स्वयं सर्वैः अदृश्यः – ஸ்வயம்ʼ ஸர்வை꞉ அத்³ருʼஶ்ய꞉ – எல்லோரும் தன்னை அறிந்திடாதபடி அமைந்தவர்,
यः – ய꞉ – எவரோ
तं सोमसुन्दरं – தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ – அந்த ஸோமஸுந்தரரை
वन्दे – வந்தே³ – வணங்குகிறேன்.
பொருள் :
அறிபவராகவும், அறிவாகவும், அறியப்படுபவராகவும் உள்ளவரும், உலகெங்கும் வியாபித்து விளங்குபவரும், எல்லோரும் தன்னை அறிந்திடாதபடி அமைந்தவருமாவனர் எவரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 2
Meaning :
I adore that Somasundarar, who is the Knower, the Knowledge, the Known, the One who pervades throughout the world, the One who makes everyone unaware of Himself. 2
तं सोमसुन्दरं – தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ – அந்த ஸோமஸுந்தரரை,
वन्दे – வந்தே³ – வணங்குகிறேன்.
பொருள் :
இந்திரன் கூறினார் –
‘ஏகன்’ (ஒன்றானவன்), ‘ப்ரஹ்மன்’ (தன்னிலும் அதிகரித்ததொன்றில்லாதது), ‘அத்விதீயன்’ (இரண்டற்றது – தன்னைத் தவிர வேறு இல்லாதது), ‘பரிபூர்ணன்’ (நீக்கமற நிறைந்தது), ‘பராத்பரன்’ (சிறந்ததிலெல்லாம் சிறந்தது) – என்றெல்லாம் வேதங்களால் போற்றப்பெறுபவர் எவரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 1
Meaning :
Indra said –
I worship Somasundaram (Lord Shiva), who is always praised by the Vedas as ‘Eka’, ‘Brahma’, ‘Adviteeya’, ‘Paripoorna’, ‘Paraatpara’. 1
ஏகன் – ஒன்றானவன் – தன்னைப் போல் ஸஜாதீயமாகவோ விஜாதீயமாகவோ மற்றொன்று இல்லாதது. இரண்டு மான்கள், நான்குகால் பிராணிகள் என்று சொன்னால், மானின் லக்ஷணங்களுடன் கூடிய இன்னொன்று என்றாகிறது. நான்குகால் பிராணிகள் என்று சொன்னால், நான்கு கால்கள் உடைய ஆனால் வேறு வேறு லக்ஷணங்களுடன் கூடிய பல பிராணிகள் (மான், பசு, புலி, சிங்கம், யானை, முயல் இத்யாதிகள்) என்று கொள்ளலாம். பிரம்மத்தைப் பொருத்தவரை அதைப் போன்ற இன்னொன்று இல்லை. இரண்டாவது பிரம்மம் என்று இல்லாமல் ஒன்றே ஆனது.
“எதை அடைந்தபின், அடைவதற்கு வேறொன்று என்பது இல்லையோ, எவ்வின்பத்தினை அடைந்தால், அதன் பின் அதைத்தவிர வேறொரு இன்பம் என்றில்லையோ, எவ்வறிவானது, தான் யாரென அறிந்திடும் அறிவினைத் தந்திட, அந்த தன்னறிவு அன்றி வேறேதும் அறிய இல்லை, என்கிற நிலைதனைத் தந்திடுமோ, அது, வேறொன்றும் இல்லை, அது தான் அன்றி வேறொன்றும் இல்லை, அது, பிரம்மம் என அவன் சென்றடைவான்.”
“எதைக் கண்டபின், பார்ப்பதற்கு வேறொன்று என்பது இல்லையோ, எதை அடைந்தபின், அதன்பின் இன்னொரு பிறப்பு என்பதில்லையோ, எதை அறிந்தபின், அதன்பின் அறியத் தக்க பொருள் என்று வேறில்லையோ, அப்படிப்பட்ட பொருள் தான், பிரம்மமாம்.” – ஆத்மபோதத்திலிருந்து.
அத்விதீயன் – இரண்டற்றது (ஒன்றானவன்) – தன்னைத் தவிர வேறு இல்லாதது., அதுல்யன் – ஸமானமற்றது, இணையற்றது.
மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமான், தன் பக்தர்களுக்காக அநேக திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். அவற்றுள் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பிரஸித்தம். இவை பற்றி வடமொழியில் ஹாலாஸ்ய மாஹாத்ம்யம் எனும் ஸ்கந்த புராணப் பகுதியும், தென்மொழியில் திருவிளையாடற் புராணம் எனும் நூலும் காணக்கிடைக்கின்றன.
இத்திருவிளையாடல்களில் முதலாவது இந்திரன் சாபம் தீர்த்தது. இதைப் பற்றி ஹாலாஸ்ய மாஹாத்ம்யத்தில் கூறும்போது, இந்த்ரன் ஸோமஸுந்தரரைத் துதித்ததாகக் குறிப்பு வருகிறது.
இந்திரனின் பாபம் நீங்கிய வரலாறு :
தேவர்களின் தலைவன் இந்த்ரன் விசுவகர்மாவால் அமைக்கப் பெற்ற ஸுதர்மா என்ற ஸபையில் அமர்ந்து மூவுலகையும் ஆண்டான். ஸபையில் நடனமாடிய திலோத்தமையின் அழகில் மயங்கியவன் தன் குரு பிருஹஸ்பதி ஸபைக்கு வந்ததை அறியாமல் அவரை வரவேற்று உபசரிக்காததால் மனமுடைந்த பிருஹஸ்பதி தேவருலகை விட்டகன்றார். நடனம் முடிந்ததும் மனம் தெளிந்த இந்த்ரன் குருவிடம் தவறாக நடந்து கொண்டதையும் அவர் அகன்றுவிட்டதையும் உணர்ந்தான். இந்தச் செய்தி அறிந்த அஸுரர்கள் குருவை அவமதித்த இந்த்ரனையும் தேவர் படையையும் எளிதில் வென்றனர். தேவர்கள் இந்திரனுடன் பிரும்மாவிடம் சென்று உதவ வேண்டினர்.
த்வஷ்டாவின் புதல்வனும் மூன்று தலைகள் உள்ளவனுமான விசுவரூபனைக் குருவாகக் கொள்ளும்படி பிரும்மா கூறினார். அவரிடம் சென்று அவரைக் குருவாக வரித்து அவரிடமிருந்து சிவகவசம் எனும் வஜ்ரக் கூடு போன்ற மந்த்ரம் பெற்று அதன் வலிமையால் அஸுரர்களைத் தேவர்கள் வென்றனர். விசுவரூபர் தன் ஸகோதரியின் புதல்வர்களான அஸுரர்களிடம் அன்பு பூண்டு மறைமுகமாக அவர்களுக்கு உதவுவதைக் கண்ட இந்த்ரன் விசுவரூபனை வஜ்ராயுதத்தால் வெட்டினான். அவரது உடலிலிருந்து பறவைகள் வடிவில் உயிர் அகன்றது. இந்த்ரனுக்கு நேர்ந்த பிரும்ஹ ஹத்தி பாபத்தை அவன் பூமியிடமும், நீரிலும் பெண்களிடத்திலும் மரங்களிடத்திலும் பங்கிட்டுத் தந்தான். வெட்ட வெட்ட நிரம்புகிற ஆற்றலை பூமிக்கும், ப்ரசவிக்கும் வரை புருஷனுடன் உடலுறவு கொள்வதைப் பெண்களுக்கும், பனியாகிக் கெட்டியானாலும் இளகுவதை நீருக்கும், வெட்ட வெட்டத் துளிர்ப்பதை மரங்களுக்கும் ஈடாக இந்த்ரன் தந்தான்.
விசுவரூபரின் தந்தை தன் மகனைக் கொன்ற இந்த்ரனுக்கு எதிரியாக ஒரு புத்திரனை வேண்டி யாகம் புரிந்தார். விருத்திரன் தோன்றினான். தினமும் ஒரு வில்லடி வளர்ந்த அந்த அஸுரனை வெல்ல இந்த்ரனால் இயலவில்லை. வஜ்ராயுதமும் பயனற்றுப் போனது. திருப்பாற் கடலைக் கடைந்தபோது தேவரும், அஸுரரும் தம் தம் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் ததீசி முனிவரிடம் தந்தனர். இந்த்ரனின் மந்த்ரசக்தி மிக்க வஜ்ரமும் அதில் ஒன்று. ததீசி அதனை விழுங்கி முதுகின் நடு எலும்புக் கூட்டில் அவற்றைப் பதித்துக் காப்பாற்றி வந்துள்ளதை விஷ்ணு நினைவு படுத்த, ததீசியிடம் சென்று இந்த்ரன் ஆயுதத்தைத் தரவேண்டினான். ததீசி தன் யோகபலத்தால் சிரமமின்றி உயிரை விட்டார். இந்திரன் அவரது முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் அமைத்து அதனால் விருத்ரனை எதிர்த்தான்.
விருத்ரன் பயந்து கடலில் மூழ்கி மறைந்தான். அகஸ்தியரிடம் வேண்ட, கடல் நீரைக் குடித்து வற்றச் செய்தார். விருத்திரன் அங்கு யோக நிலையில் அமர்ந்து சித்த மடங்கி இருந்தான். இந்த்ரன் வஜ்ராயுதத்தால் அவனைக் கொன்றதும் அவனைப் பிரும்ம-ஹத்தி பாபம் நிழலாகத் தொடர்ந்தது. அதனைக் கண்டு பயந்த இந்திரன் கைலாஸம் சென்று தாமரைத் தண்டினுள் நுழைந்து மறைந்து வாழ்ந்தான். நஹுஷன் இந்திர பதவி பெற்றுத் தேவருலகை ஆண்டான்.
இந்திரன் துயருற்று பிருஹஸ்பதியைத் தியானித்ததும் அவர் நேரில் வந்தார். இந்திரனது குற்றத்தை மன்னித்தார். சிவலிங்க வழிபாடே இதற்குரிய கழுவாய் எனக் கண்ட குரு ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் சென்று நீராடி சிவனை வழிபடக் கூறினார்.
பெரும் பாபம் நீங்குவதற்காக குருவின் வாக்யத்தைக் கேட்ட இந்த்ரன் பயம் நீங்கியவனாக அமராவதி சென்று குருவுடன் உச்சை சிரவஸ் என்ற தன் குதிரைமீதேறி பூமியில் இறங்கிக் கைலாஸம் முதலிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று புனித நதிகளில் நீராடிச் சிவபெருமானை வழிபட்டான். பிரும்ம ஹத்தி எல்லாவிடத்திலும் அவனைத் துரத்தியது.
வழியில் வேட்டையாடுவதில் நாட்டத்தால் காடுகளில் சுற்றியவன் ஸோமஸுந்தரர் இருக்குமிடம் வந்தான். வேட்டையில் நாட்டம் குறைந்து தயை அதிகமாவதை உணர்ந்த இந்த்ரன் கடம்புக் காட்டில் நுழையும் போதே பிரும்ம-ஹத்தி தன்னை விட்டகன்று விட்டதை உணர்ந்தான். அங்கு எல்லா உயிரினங்களும் அன்புடன் பழகின. எதிரில் பெரும் தடாகம் தென்பட்டது. அதில் நீராடினான். அதன் வடமேற்கில் ஒரு லிங்கம் இருந்தது. அதனைச் சுற்றி வந்த கிளிகள் ” சிவ ! சம்போ மஹாதேவ! சங்கர! ” என்று இறைவனைப் பாடின. பிருஹஸ்பதியிடம் தான் செய்ய வேண்டியதைப் பற்றிக் கேட்டான்.
“இந்தத் தடாகத்தின் கரையில் ஒரு ஆலயத்தைக் கட்டி, அதில் இந்த லிங்கத்தை வைத்துப் பூஜிப்பாய்” என்று குரு கூற உடன் விசுவகர்மாவை அழைத்து கோவில் கட்டச் செய்தான். பூக்களால் வழிபட விரும்பி காட்டிலிருந்து பூக்களைக் கொணரத் தன் தேவ கணங்களை ஏவினான். எங்கும் பூ கிடைக்கவில்லை. தன் வெண்குடையை லிங்கத்தின் மீது தாங்கினான். அதற்குள் விசுவகர்மா கோவிலைக் கட்டி முடித்தான். அந்த அழகிய அலங்கரிக்கப் பெற்ற கோவிலில் ஈசனை வைத்து வழிபடத் தொடங்கினான். புஷ்பங்களைக் கொணரச் சென்றவர்கள் பக்கத்திலுள்ள காடுகளில் தேடியும், பூ கிடைக்காமல் திரும்பினர்.
இறைவன் தன் அருளால் தடாகத்தில் தங்கத் தாமரைகளைத் தோற்றுவித்தார். அவற்றை கொண்டு வந்து ஈசனையும், தேவியையும் இந்த்ரன் வழிபட்டான். இந்த்ரன் முன்னே மிகவும் ஸுந்தரனாகத் தேவியுடன் இறைவன் காட்சியளித்தார். அதனைக் கண்டானந்தித்த இந்த்ரன் தேவனைத் துதித்து வணங்க, இறைவன் அதை ஏற்று அருள் புரிந்தார். தினமும் தனது வழிபாட்டை ஏற்க இந்த்ரன் வேண்டியதும், இறைவன் கூறினார், ” பிரும்மஹத்தி பாபம் நீங்கியது. உன்னால் அமைக்கப் பெற்ற இந்த விமானம் உன் பெயருடன் விளங்கட்டும். ப்ரளய காலத்திலும் இது அழியாதிருக்கட்டும். ஆண்டு தோறும் வஸந்த ருதுவில் சித்திரை மாதத்தில் சித்திரை நக்ஷத்திரம் கூடிய பௌர்ணமியில் தேவர்களுடன் வந்து பொற்றாமரைக் குளத்திலுள்ள பொற்றாமரைகளால் அர்ச்சித்து வழிபடுவாயாக ! ” என்றருளி மூலலிங்கத்தினுள் மறைந்தார்.
அதிலிருந்து இந்நாள் வரை சித்திரைத் திருநாளை இந்திரன் தேவர்களுடன் வந்து கண்டுகளித்துச் செல்கிறான். இந்திரனுக்கு அருள் புரிந்ததே மதுரையில் நிகழ்ந்த முதல் லீலை.
பரமேச்வரர் இந்திரனுக்கு ஸோமஸுந்தரராகக் காட்சியளித்த போது, இந்திரனால் செய்யப்பட்ட ஸ்துதியே, இந்த ஸோமஸுந்தர ஸ்துதி.
॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥
इन्द्र उवाच –
एकं ब्रह्माद्वितीयञ्च परिपूर्ण परात्परम् । इति यो गीयते बेदैस्तं वन्दे सोमसुन्दरम् ॥ १ ॥
ज्ञातृज्ञानज्ञेयरूपं विश्वं व्याप्य व्यवस्थितम् । स्वयं सर्वैरदृश्यो यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ २ ॥
अश्वमेधादियज्ञैश्च यस्समाराध्यते द्विजैः । ददाति च फलं तेषां तं वन्दे सोमसुन्दरम् ॥ ३ ॥