वाग्भिः-अभि-स्तुवन्ति – வாக்³பி⁴:-அபி⁴-ஸ்துவந்தி – ( தங்கள் ) வாக்கால் நன்றாக ஸ்துதித்தனர்.
பொருள் :
( யாரோ ) கடலினிடத்தில் விளையாட்டில் ஈடுபட்டு, கடலில் ( பெரிய ) அலை உண்டான போது, ( இது ) யாரால் என்று சிந்தித்து, கடலரசனும் தேவர்களும் பயந்தனர்., பின் ( இவரால் என்றறிந்து ) யானை முகத்தவரிடத்தில் ( விநாயகரிடத்தில் வந்து ), அந்த விச்வேச்வரரை ( விநாயகரை ), ( தங்கள் ) வாக்கால் நன்றாக ஸ்துதித்தனர். 18
த்வைபாயனரால் ( வேத வ்யாஸரால் ) கூறப்பட்ட புராணத்தை ( பண்டைக் கதையை ) நன்கு ஆலோசித்து, தன் தந்தநுனியாகியதினால், முழுவதும் எழுதி தந்தவரான அவரை, மேலான ரூபம் உடையவரை, தலையில் சந்திரனை சூடியவரின் ( பரமசிவனாரின் ) மகனை ( விநாயகரை ) மனத்தால் நினைக்கிறேன். 17
# सुविचार्य – ஸுவிசார்ய – நன்கு ஆலோசித்து. மஹாபாரதத்தை எழுத ஆரம்பிக்கும் போது எழுதுவதற்கு கையில் எதுவும் கொண்டு வரவில்லை, வ்யாஸரும் தரவில்லை. எழுத உட்கார்ந்தாகிவிட்டது. ஆகவே எதனால் எழுதலாம் என்று நன்கு ஆலோசித்து, பின் தன் தந்தத்தையே ஒடித்து அதன் நுனியால் எழுதினார். ( அல்லது ) எழுத ஆரம்பிக்கும் போது , ச்லோகத்தின் பொருளை நன்கு உணர்ந்தபின் தான் எழுத வேண்டும் என்று வ்யாஸர் கூறியிருந்தார். ஆகவே நன்கு ச்லோகங்களின் பொருளைப் பற்றி ஆலோசித்தார்., என்றும் கொள்ளலாம்.
# अग्र्य-रूपं – அக்³ர்ய-ரூபம்ʼ – தன் அழகை இழந்தாவது, பிறர்க்குப் பயன்படுவதான கிரந்தத்தைக் காக்க வேண்டும் என்கிற தியாக எண்ணத்தால் , அவரதுதன் தந்தத்தில் ஒன்றையே ஒடித்துவிட்டார். அவரது தியாக உள்ளத்தின் மேன்மையைக் காட்டுகின்ற ரூபமாம் இது.
# इन्दुमौलेः सुतं – இந்து³மௌலே: ஸுதம்ʼ – சரி. இதை யாரிடமிருந்து கற்றிருப்பார் என்று யோசிக்க, தன் கண்டம் நீலநிறமானாலும் பரவாயில்லை , மக்களைக் காக்க வேண்டும் என்று விஷத்தைப் பருகிய பரமசிவனாரிடமிருந்து கற்றிருப்பார் என்று தெரிகிறது.
மகாபாரதம் எழுதிய விநாயகர் :
வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார். பாடுகின்றவர் எழுதினால் பாடுகின்ற வேகம் தடை படும். ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று வியாசர் சிந்தித்தார்.
விநாயகர்தான் அதற்கு ஏற்றவர் என்று முடிவு செய்தார். விநாயகரை வழிபாடு செய்தார். விநாயகர் வியாசரின் முன் தோன்றினார். வியாசர் அவரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார். அதற்கு சம்மதித்த விநாயகர் நான் வேகமாக எழுதுவேன். நான் எழுதுகின்ற வேகத்துக்கு உம்மால் பாட முடியுமா என்றார்.
வியாசர் அதுகேட்டு திகைத்தார். ஆகட்டும். நீர் எழுதுகின்ற வேகத்திற்கு ஏற்ப நான் பாடுவேன். ஆனால் பொருள் தெரிந்து எழுத வேண்டும் என்றார். பொருள் தெரிந்து எழுதுவதென்றால் வேகமாக எழுத முடியாது. விநாயகர் சரி என்றார். வியாசர் பாட தொடங்கினார். விநாயகர் தமது கொம்பினால் மேரு மலையில் எழுதலானார். 60 லட்சம் கிரந்தங்கள் பாடினார். இதில் விநாயகருடைய எழுதும் வேகத்தை மட்டுப்படுத்தும் பொருட்டுக் கடினமான பதங்களை அமைத்து இடையே 8800 சுலோகங்கள் பாடினார். இதற்கு என்ன பொருள் என்று விநாயகர் சிறிது சிந்திக்கும்பொழுது பலப்பல சுலோகங்களை வியாசர் மனதில் ஆயத்தம் செய்து கொண்டார்.
இவ்வாறு வியாசர் பாடிய அறுபது லட்சம் கிரந்தங்களில் 30 லட்சம் தேவருலகில் நின்றது. 15 லட்சம் அசுரவுலகில் நின்றது. 14 லட்சம் யட்சவுலகில் நின்றது. ஒரு லட்சம் மட்டுமே பூவுலகில் நின்றது.
[ I adore the Dual (Rama and Sita),] He (rāma) who is the hero of Ayodhya and adornment to Raghu clan and She (sītā) who is the heroine of Mithila and adornment to Videha clan. 1
सः गजास्यः – ஸ: க³ஜாஸ்ய: – அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ),
सदा पातु – ஸதா³ பாது – எப்பொழுதும் காக்கட்டும்.
பொருள் :
அழகிய பிளிறல் உள்ளவர், உதிக்கின்ற கோடி சூர்ய ஒளியுள்ளவர், ( ஐந்து முகங்களைக் கொண்டவரால் ) பரமசிவனாரால் தோளில் தாங்கப்பட்டவர், முனிவர்கள், தேவர்கள் மற்றும் அடியார்கள் அனைவரையும், பெருவழிகளில் செல்கையில் ( பயணத்தில் ) அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ) எப்பொழுதும் காக்கட்டும். 16
# ஹேரம்ப³: – உரக்கப் பிளிறுபவர் என்றும் கொள்ளலாம்.
# ரத்²யாஸு – பயணத்தில் என்பது வாழ்க்கைப் பயணத்தில் என்றும் கொள்ளலாம்.
ராமன் ஸீதை இருவரும் பட்டாபிஷேகம் செய்து கொண்டு ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்திருக்கும் சமயத்தில், ஹனுமார், ராமன் ஸீதை இருவரையும் (மாறி மாறி) ஸ்தோத்ரம் செய்கிறார்.
இந்த ஸ்தோத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள ச்லோகங்களின், முதலாவது மற்றும் மூன்றாவது பாதங்கள் இராமரைப் பற்றியும்; இரண்டாவது மற்றும் நான்காவது பாதங்கள் ஸீதையைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
ராமரும் ஸீதையும் உள்ளத்தளவில் ஒருமித்த கருத்தை உடையவர்கள். கட்டினால் கண்டநாள் முதல் அன்பில் ஆழ்ந்தவர்கள்; அவர்கள் வாழ்ந்த விதம், அன்புசெலுத்தியவிதம், அக்கறை காட்டியவிதம், மரியாதையுடன் நடந்து கொண்டவிதம் இவைகளால் அவர்களுக்குள் இருந்த அன்யோன்யம் நன்றாக விளங்குகின்றது.
ஸீதாராமரைப் போன்ற பொருத்தமான மிதுனத்தைக் காண்பதும் அரிதே.
ஸீதாப்பிராட்டியை அசோகவனத்தில் ஆஞ்ஜனேயர் கண்டவுடன், ஸீதா – ராமரை ஒப்புநோக்குகிறார். அப்போது கீழ்க்காணும் கருத்தைக் கூறுகிறார்.
‘இராமனுக்கு இணையான ஒழுக்கம், வயது, நடத்தை உடையவளும், இணையான உயர்குலம், லட்சணம் உடையவளுமான சீதைக்கு இராமன் ஏற்றவர்; அவருக்குக் கருங்கண்ணாளான இவர் ஏற்றவர்’.
மேலும், ஸீதா-ராமரது ஒத்த சிந்தனையை வால்மீகி ராமாயணம் காண்பிக்கிறது.
ஸீதை கூறுவது –
अनन्या राघवेणाहं भास्करेन प्रभा यथा।
அனன்யா ராக⁴வேணாஹம்ʼ பா⁴ஸ்கரேன ப்ரபா⁴ யதா²।
ஸூரியனை விட்டுப் பிரியாத பிரபை போல, இராகவனிடமிருந்து நான் (ஸீதை) பிரிக்க முடியாதவள்.
வால்மீகி ராமாயணம், ஸுந்தர காண்டம், 21.16.
ராமர் கூறுவது –
अनन्या हि मया सीता भास्करेन प्रभा यथा।
அனன்யா ஹி மயா ஸீதா பா⁴ஸ்கரேன ப்ரபா⁴ யதா²।
ஸூரியனிடமிருந்து பிரிக்க முடியாத ஒளியைப் போல, இவள் (ஸீதை) என்னிடமிருந்து பிரிக்க முடியாதவள்.
வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 118.19.
ஆகவே தான் ஸீதா-ராமர்கள் திவ்ய-தம்பதிகள் என்றழைக்கப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட திவ்ய-தம்பதிகளை ஒரே அரியணையில் பார்த்ததும் ஆஞ்ஜனேயர் இருவரையும் குறித்து ஸ்தோத்திரம் செய்வதாக அமைந்துள்ளது. இந்த ஸ்தோத்ரம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை.
பாத்ம புராணத்தின் படி, பரமேச்வரர், பார்வதி தேவிக்கு பகவான் ஶ்ரீ ஹரியினது பெருமைகளையும், வைஷ்ணவ தர்மத்தைப் பற்றியும் கூறுகிறார். அதைக் கேட்ட பின், பார்வதி தேவியும் பெருமாளின் மீது பக்தி கொண்டு ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஸ்தோத்திரம் செய்து பின்னரே உணவருந்துவது என்று கொண்டிருந்தார்.
ஒரு சமயம் பரமேச்வரர் உணவருந்த வந்தபோது தேவியையும் அழைத்தார். தேவி கூறினாள், ‘ நாதா ! நான் ஸஹஸ்ரநாமம் பாடம் செய்த பின்னரே உணவருந்துவேன். அதற்குள்ளாக தாங்கள் உணவருந்தலாமே ‘ என்று. அதற்கு பரமேச்வரரும், ‘ மிகுந்த புண்ணியம் செய்தோருக்கல்லவா ஹரிபக்தி உண்டாகும்.
யாமும் ராம ! ராம ! ராம ! என்று ராம நாமத்திலேயே மனம் ரமித்தபடி இருக்கிறேன். ராம நாமம் ஆயிரம் நாமங்களுக்கும் சமமானது. நீயும் ராம நாமத்தை உச்சரித்து என்னுடன் உணவருந்தலாமே ! ‘ என்றார். இதைக் கேட்ட தேவியும் அவ்வாறே செய்தாள். பின் ராமரது ஏனைய பிற நாமங்களையும் பற்றிக் கூறுமாறு பரமேச்வரரிடம் வேண்டினாள். அப்போது பரமேச்வரர் ராமரது நூற்றியெட்டு நாமங்களைப் பற்றிக் கூறினார். அதுவே இந்த ராம அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம்.
இது பத்ம புராணத்தில், உத்தர காண்டத்தில், 254 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது.
இரகசியத்திலும் இரகசியமான இதனை, தேவி ! உன் மீதுள்ள பிரியத்தின் காரணமாக கூறப்பட்டது. பக்தி உள்ளத்துடன் யார் இந்த ஸ்தோத்திரத்தை படிக்கிறார்களோ, கேட்கிறார்களோ, நூறுகல்பகோடி காலங்களாக ஏற்பட்ட எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனுக்கு நீரும் நிலமாகிவிடுகிறது; சத்ருக்கள் மித்ரர்களாகவும், அரசர்கள் தாசர்களாகவும், எரிநெருப்பு இதமாகவும் மாறிவிடுகின்றன. பூதங்கள் அனுகூலமாகவும், நில்லாத செல்வங்கள் நீங்காதமையவும் செய்கின்றன.
பக்தி பாவனையுடன் படிக்குமவர்க்கு கிரஹங்கள் அனுகிரஹம் செய்கின்றன, உபத்திரவங்கள் தீர்வடைகின்றன.
கீர்த்தனை செய்வோருக்கு, முன் பத்து தலைமுறையினரும், பின் பத்து தலைமுறையினரும், ஆயிரம் கோடி கல்பகாலத்துக்கும் நூறுகோடி கல்பகாலத்துக்கும் வைகுண்டத்தில் பகவானை அனுபவிப்பர்.
ஶ்ரீ ராம அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரத்தை படித்து பகவானது அருள் பெறுவோம்.
तं सोमसुन्दरं – தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ – அந்த ஸோமஸுந்தரரை
वन्दे – வந்தே³ – வணங்குகிறேன்.
பொருள் :
தன்னுடையதான தாமரைக் கண்ணைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால், யாரை மகிழ்வித்து, ஶ்ரீபதியாகிய பெருமாள் சக்கரத்தைப் பெற்றாரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 6
Meaning:
I adore that Somasundarar, after whom delighting with a Pooja with his eye (as a flower), Perumal gets chakram. 6
# பெருமாளுக்கு புண்டரீகாக்ஷன், பத்மாக்ஷன் என்றெல்லாம் பெயருண்டு. தாமரையிதழைப் போன்ற கண்களையுடையவர் என்று பொருள். இயல்பாகவே அப்படிப்பட்ட கண்களை உடையவர் என்றும் கொள்ளலாம்.
* நிஜ நேத்ர அம்புஜ க்ருத பூஜயா – தன்னுடைய/ விசேஷமான கண்ணாகிய தாமரையைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால்.
* நிஜ நேத்ராம்பு-ஜ க்ருத பூஜயா – தன்னுடைய ஆனந்தக் கண்ணீரைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால்.
பெருமாள் சக்கரம் பெற்ற சரித்திரம் :
திருமால் ஈசனிடம் சுதர்ஸன சக்கரம் பெற்ற வரலாறு சிவமஹாபுராணத்திலும் காணக்கிடைக்கிறது.
காஞ்சி புராணம் – திருமாற்பேற்றுப் படலம் (ஶ்ரீ சிவஞான சுவாமிகள் அருளியது) கூற்றுப்படி,
குபன் என்ற அரசன் ஒரு திருமால் பக்தன். அவனுக்கும் ததீசி முனிவருக்குமிடையே ஒரு முறை பகை ஏற்பட்டது. குபன், திருமாலிடம் முறையிட்டான். திருமால் ததீசி முனிவர் மீது தன் சக்கராயுதத்தை ஏவினார். முனிவரது வஜ்ர உடலை தாக்க முடியாமல் சக்கராயுதம் கூர் மழுங்கியது. அதனால் இத்தலத்தை அடைந்த திருமால், சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி, ருத்ராட்சம் அணிந்து சக்கரம் பெற வேண்டி, முறைப்படி ஈசனை பூஜை செய்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு ஆயிரம் நாமங்கள் சொல்லி அர்ச்சித்து வந்தார். ஒரு நாள், பூஜையின்போது ஈசனின் திருவிளையாடலால், ஒரு மலர் குறைந்தது. வழிபாட்டில் குறையேற்படலாகாது என்று எண்ணி, தன் கண்ணை பறித்து கண்மலரால் ஈசனை வழிபாடு செய்தார், திருமால். இறைவன் உளம் மகிழ்ந்து பெருவடிவு தாங்கி, திருமாலுக்கு காட்சி கொடுத்தார்.
பெருமான் திருமாலை பார்த்து பார்த்து, ‘‘நாராயணரே! தாமரை மலருக்காக உன் கண்ணை எடுத்து, அர்ச்சித்தமையால், உனக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். இனி, நீ தாமரைக் கண்ணன். ‘பதுமாக்கன்’ என்று நீ பேறு பெற்றதால், இத்தலம் ‘திருமாற்பேறு’ என்று உன் திருப்பெயரால் விளங்கப்பெறும்’’ என்று அருள் செய்து ‘‘சுதர்ஸனம்’’ என்னும் பெயர் கொண்ட சக்கரப்படையை வழங்கினார். நெடுமால் மிக்க மகிழ்ந்து சிவனாரை மும்முறை வலம் வந்து வணங்கினார். ‘‘என் போன்று ஆயிரம் திருநாமங்கள் கூறி மலர்களால் வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரம் அருள வேண்டும்’’ என ஈசனை வேண்ட, அவ்வாறே வரம் அளித்தார்.
திருமால்பூர் அருள்மிகு மணிகண்டீச்வரர் கோயில் வேலூரில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் பக்தர்களுக்கு சடாரி சார்த்தி, தீர்த்தம் தருவது தனி சிறப்பு.
இத்தலத்தை வழிபடுவோருக்கு உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு.
அன்று வரமளித்த பரமேச்வரரே இங்கு சோமசுந்தரராக வீற்றிருக்கிறார்.
चारुरुचा मृगाक्ष्या आलिङ्गितं – சாருருசா ம்ருʼகா³க்ஷ்யா ஆலிங்கி³தம்ʼ – அழகிய தோற்றமுடைய, மான் போன்ற விழியுடையவளால் அணைக்கப்பெற்றவரை,
सम्भोग-लोलं – ஸம்போ⁴க³-லோலம்ʼ – ( அந்த ) இன்பத்தில் ஆசையுடையவரை,
मद-विह्वल-अङ्गं – மத³-விஹ்வல-அங்க³ம்ʼ – மதஜலம் பட்டு நெகிழ்ந்த அங்கங்களுடையவரை,
विघ्न-औघ-विध्वंसन-सक्तं – விக்⁴ன-ஔக⁴-வித்⁴வம்ʼஸன-ஸக்தம்ʼ – வெள்ளம் போல் வரும் இடையூறுகளை ஒழிக்கத் திருவுள்ளம் கொண்டவரை,
एकं – ஏகம்ʼ – ( அப்படிப்பட்ட ) ஒரே தெய்வத்தை,
तं कान्त-द्वि-रद-आननं – தம்ʼ காந்த-த்³வி-ரத³-ஆனனம்ʼ – இரு தந்தங்களுடன் கூடிய மனம் கவரும் ( யானை ) முகமுடையவரை,
नमामि – நமாமி – வணங்குகிறேன்.
பொருள் :
அழகிய தோற்றமுடைய, மான் போன்ற விழியுடையவளால் அணைக்கப்பெற்றவரை, ( அந்த ) இன்பத்தில் ஆசையுடையவரை, மதஜலம் பட்டு நெகிழ்ந்த அங்கங்களுடையவரை, வெள்ளம் போல் வரும் இடையூறுகளை ஒழிக்கத் திருவுள்ளம் கொண்டவரை, ( அப்படிப்பட்ட ) ஒரே தெய்வத்தை, இரு தந்தங்களுடன் கூடிய மனம் கவரும் ( யானை ) முகமுடையவரை ( விநாயகரை ) வணங்குகிறேன். 15
சாருருசா ம்ருʼகா³க்ஷ்யா ஆலிங்கி³தம்ʼ – அழகு நிறைந்த தன் அன்னையால் ( பார்வதி ) அன்புடன் தழுவிக்கொள்ளப்பட்டவரை, என்று கொள்க. ம்ருʼகா³க்ஷி என்பது அம்பாளின் நாமம்.
ஸம்போ⁴க³-லோலம்ʼ – அன்னையால் நன்றாக செய்து தரப்படும் நைவேத்யத்திற்கு ( மோதகம் ) ஆசைப்படுபவரை, என்று கொள்க., போ⁴க³: – நைவேத்யம்.
மத³-விஹ்வல-அங்க³ம்ʼ – ( அன்னையின் அணைப்பாலும், மோதகத்தின் இனிமையாலும் ஏற்பட்ட ) ஆனந்தத்தால் உடலும் உள்ளமும் நெகிழ்ந்தவரை, என்று கொள்க.
இத்தகைய ஆனந்த நிலையில் இருக்கும் போது வணங்கினால், வெள்ளம் போல் வரும் இடையூறுகளை ஒழித்தருள்வார். இவையெல்லாம் பால லீலைகள்.
त्वां वन्दे – த்வாம்ʼ வந்தே³ – தங்களை வணங்குகிறேன்.
பொருள் :
சரணம் அடைந்த ஜீவன்களின் துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளும், சுகங்களையும், அவற்றில் திருப்தியையும் அளிப்பவளும், பரா பிரகிருதியானவளுமான தங்களை வணங்குகிறேன். 8
Meaning :
Oh goddess who destroys all the sorrows of beings surrendering to you, Oh Goddess who grants wealth and pleasure , I salute you who is the divine nature. 8